Tuesday 31 December 2013

புதன் துதி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும் 
புதபகவானே பொன்னடி போற்றி 
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே 
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி 

மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம் 
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் 
திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க 
வல்லான் புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி. 

புண்ணிய திருமக புதனே போற்றி 
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி 
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி 


No comments:

Post a Comment