Tuesday 24 December 2013

சந்திரன் துதி

அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது 
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும் 
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு 
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி! 

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் 
திங்களே போற்றி திருவரும் புரிவாய் 
சந்திரா போற்றி சற்குணா போற்றி 
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி 

பிங்கலன் அணிந்த திங்களே போற்றி 
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி 
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி 
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி





No comments:

Post a Comment