Friday 27 December 2013

சரஸ்வதி மந்திரம்


கல்வி என்றாலே சரஸ்வதி தேவிதான், நம் மனக்கண் முன் வருவாள். கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு, ஞானத்தின் வெளிப்பாடான வெண் தாமரை மீது அமர்ந்து கொண்டு மென்மையான தோற்றம் கொண்ட ஒரு சாத்வீக தேவதை அம்சமே சரஸ்வதிதேவி.

அந்த சரஸ்வதி தேவியை வழிபட வார நாட்களில் உகந்தது புதன்கிழமையாகும். அதனால் ஒரு வளர்பிறை புதன்கிழமை நாளில் மாணவ மணிகள் அதிகாலையிலேயே குளித்து முடித்து சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்திற்கு முன்பு வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று நெய் தீபமேற்றி கீழ்கண்ட மந்திரத்தை 24 முறை அல்லது 48 முறை கூறி வர வேண்டும்.

'ஓம் ஐம் ஸாரஸ்வத்யை நமஹ'

இந்த மந்திரத்தைத் தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 48 முறை சொல்லி வருவதால் பாடங்களில் கிரகிப்புத் திறன் நிச்சயமாக கூடி வரும். 

No comments:

Post a Comment