Friday 13 December 2013

கல்வி தரும் விரதம்

பவுர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. அன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் இல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து காலையும் ,மதியமும் சாப்பிடாமல் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்குசென்று நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனுக்கோ அல்லது கோவில் நுழைவு வாயிலை அடுத்து இருக்கும் சந்திர பகவானுக்கோ வெள்ளை வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

எந்த தெய்வத்தை எண்ணி விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தின் முன்னால் அமர்ந்து மனமுருகி பாட வேண்டும். முடியாதவர்கள் மற்றவர்களைப் பாட சொல்லி கேட்டாலே போதுமானது. இரவில் பழம்அல்லது மிதமான  உணவுகளையும் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.


பவுர்ணமி விரதம் அறிவையும், அழகையும் விருத்தி செய்யும். குழந்தைகள் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் கல்வி நன்றாக வரும். குழந்தைகளக்கு பழங்கள் அல்லது சாத்வீகமான உணவுகளை சாப்பிட்டுக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment