Monday 17 March 2014

நவமி - தசமி விரதம்

நவமி விரதம் : ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ நவமி அன்று இருந்த விரதம் இருந்து தேவியை ஆராதிக்க வேண்டும். நவமி விரதங்களிலே மிகவும் சிறந்தது அனார்த்தன நவமி விரதம். 

அரசன் தேவியை நவதுர்க்கை வடிவில் வழிபட வேண்டும். அரசன் நீராடி எதிரியின் உருவை இரண்டாக வெட்ட வேண்டும். தான தருமங்கள் செய்ய வேண்டும். வெற்றிபெறுவான். 

தசமி விரதம் : ஒருவேளை உணவு. விரத முடிவில் கோதானம், சுவர்ண தானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் அவன் தெய்வபக்தி நிறைந்தவனாய், பெருந்தலைவனாய் விளங்குவான்.

Thursday 13 March 2014

தூத்துக்குடியில் ஜெயலலிதா நாளை பிரசாரம்

தூத்துக்குடி, மார்ச். 14–

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 24–ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை ஆதரித்து கடந்த 3–ந் தேதி முதல் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடியில் நாளை (15–ந் தேதி) பிரசாரம் செய்கிறார்.
இதற்காக தூத்துக்குடி கதிர்வேல் நகரில் உள்ள சிவசக்தி நகர் மைதானத்தில் பாராளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை உருவாக்கப்பட்டுள்ளது. மேடையின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை பிற்பகல் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வருகிறார். பின்பு பொதுக்கூட்ட மேடைக்கு சென்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு பேசுகிறார்.
கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அமர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வசதியாக ஆயிரக்கணக்கான சேர்கள் போடப்பட்டுள்ளன. மேடைக்கு முன்புறம் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அமரவும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார்சிங் தலைமையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு வருபவர்களை கண்காணிக்க மேடைக்கு அருகே சுழலும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்துள்ள முதல்–அமைச்சரின் பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்வதை முன்னிட்டு தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் அ.தி.மு.க. கொடி தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.

Indo-Pak officials likely to meet next month on LoC trade

  New Delhi, Feb 27 (PTI) India and Pakistani officials are likely to meet here next month to review Standard Operating Procedures (SOPs) for trade along the Line of Control in the wake of the row over arrest of a truck driver hailing from Pakistan-occupied-Kashmir (PoK) for allegedly smuggling 'brown
sugar' worth Rs.100 crore.

    Trading relations between the two countries had hit a new low following the incident at Kaman post in Uri of North Kashmir on January 17 and the traders were not allowed to cross over for over three weeks.

    However, the matter was resolved and the trading began in Poonch-Rawalakaote of Jammu division on February 20 but it could not restart in Uri-Muzaffarabad road in Kashmir division as PoK authorities refused to open the gates.

    Amid indications that Pakistan is willing to resume full fledged cross-LoC trade, a day long meeting was held here yesterday to finalise the agenda of a meeting likely next month, official sources said.

    During the meeting, participated by officials from External, Home and Finance ministries, banks, security
agencies, Army and state government, it was decided to work out ways for increasing volume of trade besides reviewing the list of items exchanged in the cross-LoC trade in the meeting with Pakistani officials.

    The sources said both sides will review the latest development of the case pertaining to brown sugar seizure and work out a formula to deal with such incidents in future.

Monday 10 March 2014

Cuban Spy Set to Be Released from U.S. Prison

A Cuban intelligence officer convicted of spying in the United States was set to be released from federal prison on Thursday after serving around 15 years.

Fernando Gonzalez, 50, a member of the so-called Cuban Five, will be released and is expected to return to Cuba in a few days, the Spanish-language El Nuevo Herald reported.

Gonzalez and fellow members of the spy ring -- that was also known as the Miami Five -- were arrested in 1998. The Cuban government eventually acknowledged that they targeted anti-Cuban government exile groups in the United States but denied they spied on American interests. All five were convicted of spying on U.S. military installations.

One member of the group, Gerardo Hernandez, was charged with conspiracy to murder after he gathered information on Brothers to the Rescue, a Cuban exile group that dropped anti-government leaflets on Cuba. Four members of Brothers to the Rescue died in 1996 after their two planes were shot down by the Cuban air force.

Rene Gonzalez, another member of the jailed group, was released in 2011. Ramon Labanino and Antonio Guerrero remain in prison.

Wednesday 5 March 2014

BJP does not have courage to seek apology from Muslims

BJP does not have courage to seek apology from Muslims:Nitish

    Patna, Feb 27 (PTI) Unimpressed with BJP's offer to apologise for any "mistake" or shortcomings in the past, Bihar Chief Minister Nitish Kumar today said one needed to have "courage" for it.

    "For seeking apology, one needs to have courage which, I think, they do not have," Kumar told reporters when asked about BJP President Rajnath Singh's offer of apology to reach out to Muslims ahead of the Lok Sabha elections.

    "You need to have a feeling from inside that I have committed this mistake... I do not think that the party has the courage to say so," Kumar, a senior JD(U) leader, said.

    Asked that though the offer was made by Rajnath Singh and not BJP's Prime Ministerial candidate Narendra Modi, Kumar said, "It will be dismissed outright."

    To a question on reports of LJP joining the BJP, Kumar said, "This is an irony, but a truth."
    He refused to comment on the expulsion of senior leader Shivanand Tiwari, who had been firing salvos at him, and four others from the party.

    Kumar said his party has reached an understanding with CPI for the Lok Sabha elections in Bihar. "A formal announcement and details of the tie-up will be announced soon."

    On sting operations revealing that poll surveys were fudged, he said, "I have been saying that these are dhokha (cheat) and a PR exercise played by people having cash bags."

    Asked if he supported ban on surveys, he said, "If I say so, people will say I am doing so because of getting less seats in these surveys... but people will themselves protest such a game played by people rich in cash."

    In an apparent dig at Narendra Modi, Kumar said, "I have been saying if the surveys are giving results in his favour what is he waiting for? He will take an oath of the highest chair without casting of ballots."

Tuesday 4 March 2014

BJP leaders meet Paswan

New Delhi, Feb 27 (PTI) Senior BJP leaders today met LJP chief Ram Vilas Paswan here to finalise details related to their alliance and possibly sharing of seats.

     BJP leaders Rajiv Pratap Rudy, Ravi Shankar Prasad and Shahnawaz Hussain went to Paswan's residence where they were received by his son Chirag Paswan, who is strongly batting for
the tie-up.

     Significantly, the meeting took place on a day BJP's Prime Ministerial candidate Narendra Modi is here and there was speculation that Paswan would meet him.

     Modi held a separate meeting with BJP chief Rajnath Singh. The meeting came a day after LJP gave clear hints about allying with BJP after their Parliamentary Board meeting.

     To a question whether LJP will tie-up with BJP, Chirag  Paswan had said that "all options are now open for the LJP". "LJP Parliamentary Board has passed a resolution that all steps, even if they are strong ones, should be taken in the interest of the party and if an alternative alliance is to be firmed up, party chief Ram Vilas Paswan should take the decision", said Chirag Paswan, who heads the Parliamentary
Board.

      BJP leaders had also said yesterday that the talks on alliance were at an advanced stage. Sources said the two parties are engaged in negotiations over the sharing of seats in Bihar.

Prasad later said the meeting was "good" and they had shared "sweets". He praised Paswan, saying he is a "senior" leader not only of Bihar but the entire country. "We have worked together during Atal Bihari Vajpayee government," the BJP leader recalled.

    Paswan's brother Ram Chandra Paswan said the "distance between BJP and LJP has come to an end on poll alliance" in Bihar.

Thursday 27 February 2014

முஸ்லிமாக மாறுவதை கேட்டு இளையராஜா அதிர்ச்சியானார்– யுவன் ஷங்கர் ராஜா

இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.
என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன். இதை கேட்டதும் ஆரம்பத்தில் அவர் அதிர்ச்சியானார். அதன் பிறகு என்னை அவர் புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்.
முஸ்லிமாக மாறியதால் எனக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.

முஸ்லிம் பெண்னை மணப்பதற்காக நான் முஸ்லிமாக மாறியதாக சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை.

Friday 21 February 2014

Karuna Shukla


Atal Bihari Vajpayee's niece Karuna Shukla joins Congress

New Delhi:  Karuna Shukla, the niece of former prime minister Atal Bihari Vajpayee and former BJP leader, today joined the Congress.

She had quit the BJP last year before the Vidhan Sabha elections, alleging that she was being neglected by senior party leaders.

The 63-year-old was a national vice-president of the BJP Mahila Morcha and also an MP from Chhattisgarh.

She had alleged that she was removed from all posts in the party and was not consulted for anything. Ms Shukla said that she was very sad at quitting the BJP but because the manner in which the party "treated" her, she was forced to leave it.

Thursday 20 February 2014

சொந்த குரலில் பாடி, ஆடுவதற்கு ரூ.25 லட்சம் கேட்கும் ஆண்ட்ரியா

‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்த பின் ஆன்ட்ரியாவின் ‘மார்க்கெட்,’ தமிழ் பட உலகில் உயர்ந்து இருப்பது நிஜம். அதைத்தொடர்ந்து பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விடலாம்... சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விடலாம் என்று கணக்குப் போட்டார், ஆன்ட்ரியா.


ஆனால், அவர் கணக்கு தவறாகி விட்டது. அவர் எதிர்பார்த்த அளவுக்கு புதிய படங்கள் வரவில்லை. இப்போது அவர், ‘விஸ்வரூபம்–2’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ‘‘முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் நான்தான் முக்கிய கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். கமலுடன் எனக்கு பாடல் காட்சி கூட இருக்கிறது.

அதில், கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறேன்’’ என்கிறார், ஆன்ட்ரியா. ‘விஸ்வரூபம்–2’ படத்துக்குப்பின் தனது சம்பளத்தை உயர்த்துவது என்று அவர் கணக்குப்போட்டு காத்திருக்கிறார். அதற்கு முன்பாக, ‘பிரம்மன்’ என்ற படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஆன்ட்ரியா ரூ.25 லட்சம் கேட்டு இருக்கிறார்.

‘‘சம்பளம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே?’’ என்று தயாரிப்பாளர் பேரம் பேசினார். உடனே ஆன்ட்ரியா, ‘‘அந்த பாடலையும் நானே பாடி விடுகிறேன். பாட்டு, நடனம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் கொடுங்கள்’’ என்றாராம். தயாரிப்பாளருக்கு அவ்வளவு பணம் கொடுக்க விருப்பம் இல்லை.

ஆனால், அந்த பாடல் காட்சியில் ஆன்ட்ரியா ஆடினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர், ஆன்ட்ரியாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து இருக்கிறார். மகிழ்ச்சியுடன் அந்த சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஆன்ட்ரியா, இனிமேல் ஒரு பாடலுக்கு தயக்கமே இல்லாமல் ஆடுவது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

Thursday 13 February 2014

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்காட்லாந்து இசைக் கல்லூரியின் கவுரவ டாக்டர் பட்டம்

ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் இவர் நிலைநாட்டினார்.

இதற்கு முன்னதாகவும், பிறகும் திரை இசைத்துறைக்கான பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ள சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்குவதாக ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அறிவித்தது.

தனது கே.எம். இசைப் பள்ளி மாணவர்களுடன் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஏ.ஆர். ரஹ்மான், இந்த கவுரவ பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் நன்றியுரை ஆற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், '1845-லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத்துறை கல்வியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனம் அளித்துள்ள இந்த கவுரவ பட்டம் தனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது' என குறிப்பிட்டார்.

Monday 10 February 2014

வார தீப பரிகார பூஜை!

ஞாயிறு:-

ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

திங்கள் :-

திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய் கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத்தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.

செவ்வாய்:-

செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.

புதன்:-

புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.

வியாழன்:-

வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

வெள்ளி:-

வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.

சனி:-

சனிக்கிழமைகளில் நல்லஎண்ணை கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீப பித்ரு சாபங்கள் நீங்கும். மேற்கண்ட வாரதீப பூஜையை திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராசுவாமிகள் தெரிவித்துள்ளார்கள்.




Wednesday 5 February 2014

ஹோமம் தரும் பலன்

ஹோமங்கள் பல உண்டு. ஒவ்வொரு ஹோமமும் எத்தகைய பலன் கிடைக்க செய்யப்படுகிறது என்று பார்ப்போம்.  


1. ஸ்ரீவாஞ்ச கல்ப கணபதி ஹோமம் – நினைக்கும் காரியம் தடையின்றி நடைபெற

2. நவக்கிரக ஹோமம் – கிரக தோஷங்கள் விலகுவதற்கு 

3. ஸ்ரீவித்யா ஹோமம் – நாட்டில் அமைதியும், சுபிட்சமும் உண்டாவதற்கு 

4. அம்ருத ம்ருத்யஞ்செய ஹோமம் – ஆயுள் விருத்திக்கு 

5. ஸ்ரீசூக்தி ஹோமம் – செல்வம் பெருக 

6. சுதர்சன ஹோமம் – எதிரிகள் நீங்க 

7. ஆவாஹந்தி ஹோமம் – ஏவல், பில்லி, சூனியம் விலக 

8. வருண ஹோமம் – மழை பொழிய.

Monday 3 February 2014

சாளக்ராம காயத்ரி மந்திரம்

‘ஓம் விஷமந் நாசாய வித்மஹே 
விஷ்ணு வாஸாய தீமஹி 
தன்னோ சிலா ப்ரஜோதயாத்’ 

இதை உபதேசம் பெற்றுத் தினமும் 27 முறை ஜபித்து, சாளக்ராம பூஜை செய்து வந்தால் சகல தோஷ நிவாரணம் ஏற்பட்டு வாழ்வில் பெரியோர்கள் மதிக்கும் நல்ல நிலையைப் பெறலாம். மேலும் சாளக்ராமத்தின் மூல மந்திரத்தை இங்கு காணலாம். இதை அனைவருமே உச்சாடனம் செய்து, துளசி, தீர்த்தம், நைவேத்தியம், தூப– தீபம் சமர்ப்பித்து வணங்கி வரலாம்.


Thursday 30 January 2014

மேல்மலையனூர் கோவில் தீ மிதி விழா விரதமுறை

மேல்மலையனூர் கோவிலில் தேர்த் திருவிழாவின் போது தீமிதித் திருவிழாவும் நடத்தப்படும். இவ்விழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கும் பக்தர்கள் கடுமையாக வெகு சுத்தத்துடன் ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். 


இந்த விரதமானது சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது போன்று மாலை அணிந்து கொள்வதிலிருந்து தொடங்குகின்றது. 

தீமிதி விழாவில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி துளசி மணிமாலை, உருத்திராட்ச மாலை சந்தனமாலை, பச்சைமணி மாலை இவைகளில் தங்களுக்குப் பிடித்தமான மாலையை வாங்கி அதனை பாலில் நனைத்து பின் மஞ்சள் நீரில் நனைத்து தன் பெற்றோர் அல்லது கோயில் குருக்கள் அல்லது அங்காளம்மன் அருள்வாக்கு பெற்றவர்களிடம் கொடுத்து மணிமாலையை அணிந்து கொள்ள வேண்டும். 

தினமும் காலை, மாலை இருவேளையும் குளித்த பின்பு `ஓம் சக்தி அங்காளம்மா' என உச்சரித்து வணங்க வேண்டும். இந்த விரதத்தின் போது மஞ்சள் அல்லது காவி நிற உடைகளை அணிவது அவசியமாகும். இந்தத் தீமிதி விழாவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பெருமளவில் பங்கு கொள்கின்றனர். 

ஆண்களுக்குக் கூறப்பட்ட அனைத்து விரத முறைகளையும் பெண்களும் கடைப்பிடிப்பர். இந்த விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது. மாலை அணிந்த பின் ஆணாயினும், பெண்ணாயினும், சிறுவனாயினும், சிறுமியாயினும் அவர் `அங்காளம்மா' என்றே அழைக்கப்படுவர். 

மனத் தூய்மையும், உடல் தூய்மையும் இந்த விரத நாட்களில் மிக அவசியமாகும். பெண்கள் இந்த விரதம் இருந்து வரும்போது மாதவிலக்கு பிரச்சினை ஏற்பட்டால் அன்று மாலையைக் கழற்றிவிட்டு மூன்று நாட்கள் கழித்து தலைக்கு மூன்று எண்ணெய் கூட்டி குளிப்பதுடன் மஞ்சள் நீறிலும் 

நீராடி அதன்பின் மாலையை பாலிலும் அதன்பின் மஞ்சள் நீரிலும் கழுவி சாம்பிராணி புகை காட்டி வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் மறுபடியும் மாலையை அணிந்து கொள்ள வேண்டும். இந்த பக்தர்கள் தீ மிதித் திருவிழாவன்று தீக்குண்டத்தில் இறங்கி வெளிவருவார்கள்.

Tuesday 28 January 2014

திருப்பாவை 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்; 
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
  









பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!   

நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு. 

Tuesday 21 January 2014

விபூதி தத்துவம்

http://www.maalaimalar.com/2014/01/18150810/vibhuti-rules.html
சாதாரணமாக திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால் பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

இதில் உள்ள தத்துவம் :

பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள் பசுவின் சாணம் (மலம்) என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால் அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல் நம்மை பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இதுவரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் நீங்கி இறைவனே நம்மை எடுத்து ஆணீட்கொள்வார். ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

Monday 20 January 2014

முன்னோர் விரத வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள்

மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். 
ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை. இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள்.

அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.

இதன் மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா?

உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும். நீங்கள் எந்த அளவுக்கு விரதமிருந்து பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும்.

பித்ரு வழிபாடு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது. நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குல தெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபாடுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும்.

இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும். இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.


Friday 10 January 2014

வைகுண்ட ஏகாதசி விரத முறை

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் லட்சுமி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும். 

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது. 

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. 

குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். 

பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள். மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாக தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. 

மார்கழியின் தனிச்சிறப்பே அதிகாலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்தால் மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிடைத்து மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். சீதேவி வீட்டினில் குடிகொள்ளும் போது எமக்கு கஷ்டமும், துன்பமும் தந்து வருத்தும் மூதேவி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.

Wednesday 8 January 2014

தேவி வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே 
சிவே ஸர்வார்த்த சாதிகே 
சரண்யே த்ரயம்பகே கெளரி 
நாராயணி நமோஸ்துதே 
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் 
சக்திபூதே சனாதனி குணாச்ரயே 
குணமயே நாராயணி நமோஸ்துதே 
சரணாகத தீனார்த்த பரித்ராண 
பராயணே ஸர்வஸ்யார்த்தி ஹரே 
தேவி நாராயணி நமோஸ்துதே



Monday 6 January 2014

மாத ஏகாதசி விரதமும், பலன்களும்

ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்களை, நலன்களை தரும் என கூறப்படுகிறது. எந்த மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? 


சித்திரை ஏகாதசி: விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும்.

வைகாசி: கைலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன்.

ஆனி: சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

ஆடி: ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம்.

ஆவணி: குழந்தை பாக்கியம் கிடைக்கும். சற்புத்திரர்கள் பிறப்பார்கள். குழந்தைகளின் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மலரும்.

புரட்டாசி: நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

ஐப்பசி: சகல வளங்களும் உண்டாகும்.

கார்த்திகை: மகிழ்ச்சியான வாழ்வு.

தை: பித்ரு சாபங்கள் நீங்கி முன்னோர் அருளாசி கிடைக்கும்.

மாசி: சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.

பங்குனி: தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.

Friday 3 January 2014

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிக்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்' அனுமனைப் பற்றிய கம்பராமாயண வரிகள் இவை. 

பஞ்சபூதங்களை வென்றவர் 'பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவன், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கை சென்றவன், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமா தேவியின் மகளான சீதையைக் கண்டவன், ராவண தேசத்தில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பினை வைத்தவன், அவன் நம் தேவைகளை அளித்து நம்மைக் காக்கட்டும்'- என்பது மேற்கண்ட வரிகளின் பொருளாகும். பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்கு கிடைத்த பெருமையாகும். 

சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்த பகுதிக்கு 'சுந்தர காண்டம்' என்று பெயர். கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு. 

சஞ்சீவி மலையை: 

சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தைப் பற்றி இங்கு காணலாம். சீதாதேவியை மீட்பதற்காக ராம- ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. 

யுத்தத்தின் போது மாயப்போரில் வல்லவனான ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய பாணம் ஒன்றை விட்டான். அந்த மூர்க்கத்தனமான பாணத்திற்கு, லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள். அவர்களுக்கு மீண்டும் சுயநினைவு வர சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த சஞ்சீவினி மூலிகை தேவைப்பட்டது. 

காற்றை விட வேகமாக செல்ல, வாயுவின் புத்திரனைத் தவிர வேறு யாரால் முடியும்? எனவே அவரையே மூலிகையை கொண்டுவரும்படி ஜாம்பவான் பணித்தார். ராமபிரானின் ஆசியுடன் மூலிகையை தேடிப்புறப்பட்ட அனுமன், மூலிகையை அடையாளம் காண முடியாமல், மூலிகை இருப்பதாக கூறப்பட்ட சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து தூக்கியபடி பறந்தார். 

பாதம்பட்ட திருத்தலம் : 

அவ்வாறு வந்து கொண்டிருந்தபோது மாலை வேளையானது. அதனால் நித்திய கர்மாவாகிய, சந்தியா வந்தனம் செய்வதற்காக ஆஞ்சநேயர் ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்று விட்டார். 

முசுகுந்தச் சக்கரவர்த்திக்காக, மகான் வியாசராஜ தீர்த்தன் என்பவர் ஆஞ்சநேயர் பாதம்பட்ட மலை உச்சியில் அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்த மலை ஆஞ்சநேயருக்கு, திருமங்கை ஆழ்வார் கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னாளில் செங்கல்வராய மகாராஜா மற்றும் பல பல்லவ மன்னர்களால் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்று இந்த திருத்தலத்தின் தல வரலாறு விரிகிறது.' '' 

வீர ஆஞ்சநேயர் கோவில்

மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சன்னிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி என்னும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். 

எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிர்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார். வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார். 

கோவில் பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங்களாக செதுக்கப்பட்டு மிளிர்கின்றன. அவற்றில் சேது பாலம் அமைத்தலும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்றுக் கருதி பிடிக்க செல்லுதலும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பமும் உயிரோட்டமானவை. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் 'பரிவேட்டை' தலமாகவும் இத்தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீரஆஞ்ச நேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரிமலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். 

அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராமநாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்ச நேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது. 

மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபட்டால் காரிய தடைகள், திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டவும், உயர் பதவி கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் வெண்ணெய் சாத்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபட வேண்டும். 

இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியும், ராமன் நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோவிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலும் உள்ளன. 

சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருக காட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.


Thursday 2 January 2014

சிவனுக்கு உகந்த விரதங்கள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெறலாம்.

1. சோமவார விரதம்  -  இந்த விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது. சிவனுக்கு உகந்த விரதங்களில் சோமவார விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..

2. உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து மாதம் தோறும் பின்பற்றுவது.

3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது

4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது. இந்த மற்ற சிவன் விரதங்களை விட மிகவும் முக்கியமானது.

5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது

7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது

8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

http://www.maalaimalar.com/2014/01/02143309/best-viratham-for-lord-shiva.html