Monday 6 January 2014

மாத ஏகாதசி விரதமும், பலன்களும்

ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்களை, நலன்களை தரும் என கூறப்படுகிறது. எந்த மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? 


சித்திரை ஏகாதசி: விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும்.

வைகாசி: கைலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன்.

ஆனி: சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

ஆடி: ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம்.

ஆவணி: குழந்தை பாக்கியம் கிடைக்கும். சற்புத்திரர்கள் பிறப்பார்கள். குழந்தைகளின் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மலரும்.

புரட்டாசி: நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

ஐப்பசி: சகல வளங்களும் உண்டாகும்.

கார்த்திகை: மகிழ்ச்சியான வாழ்வு.

தை: பித்ரு சாபங்கள் நீங்கி முன்னோர் அருளாசி கிடைக்கும்.

மாசி: சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.

பங்குனி: தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.

No comments:

Post a Comment