Tuesday 21 January 2014

விபூதி தத்துவம்

http://www.maalaimalar.com/2014/01/18150810/vibhuti-rules.html
சாதாரணமாக திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால் பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

இதில் உள்ள தத்துவம் :

பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள் பசுவின் சாணம் (மலம்) என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால் அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல் நம்மை பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இதுவரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் நீங்கி இறைவனே நம்மை எடுத்து ஆணீட்கொள்வார். ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

No comments:

Post a Comment