Tuesday 28 January 2014

திருப்பாவை 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்; 
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
  









பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!   

நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு. 

No comments:

Post a Comment